அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
ராணுவத் தாக்குதலில் 27 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணம் வளைகுடாவில் விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 27 புலிகள் கொல்லப்பட்டனர்.
ஓமந்தை என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ். பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை ராணுவத்தினர், செவ்வாய்க்கிழமை 3 மணியளவில், ஓமந்தை அருகேபுலிகளின் பதுங்கு குழி ஒன்றைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பதுங்கு குழியைச் சூழ்ந்த ராணுவத்தினர், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கிரனெட் கொண்டுதாக்குதல் நடத்தினர். இதில் 13 புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் புலிகள் பிரிவு தலைவர் குருஞ்சா அக்காவும் ஒருவர்.
புலிகளின் பதுங்கு குழியிலிருந்து பல துப்பாக்கிகளையும் ராணுவம் கைப்பற்றியது.
இதேபோல, வெற்றிலைக்கேணிஎன்ற இடத்தில் புலிகளின் படகுகளை இலங்கை கடற்படை குண்டுவீசி மூழ்கடித்தது. இதில் 14 கடற் புலிகள் இறந்தனர்.












Click it and Unblock the Notifications