இலங்-கைப் பிரி-வி-னை: "க-ரு-ணா-நி-தி க-ருத்-து அர-சு விரோ-த-மா-ன-து
சாலமன் தீவு பிரதமர் வீட்டுக்காவலிலிருந்து போலீஸ் காவலுக்கு மாற்றம்
பிரிஸ்பேன்:
ஜூன் 15 ம் தேதி நடக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக வீட்டுக்காவலில்வைக்கப்பட்டிருந்த பிரதமர் பார்த்தோலேமியா உலுபா ஆலு வீட்டுக்காவலில் இருந்து போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார்.
தெற்குப் பசிபிக் நாடுகளில் மிகச் சிறிய தீவு சாலமன் தீவு. இங்கு மொத்தம் 4 லட்சம் மக்களே வாழ்ந்துவருகின்றனர். இந்தத் தீவில் உள்ள குடல்கனால் தீவு மற்றும் மலத்தியான் தீவுகளுக்குமிடையே கடந்த ஒருவருடமாகப் பிரச்சனைகளும், மோதல்களும் நடந்து வருகிறது.
மலத்தியான் தீவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தீவில் வந்து குடியேறுகிறார்கள் என்று குடல்கனால் தீவினர்குற்றம்சாட்டியதையடுத்து அங்கே இரு தீவைச் சேர்ந்தவர்களுக்கிடையே கடந்த 18 மாதங்களாக மோதல் நடந்துவருகிறது.
இந்த நிலையில் பிரதமர் பார்த்தோலேமியுவை மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாதிகள் கடந்த திங்கள் கிழமை புரட்சிநடத்தி துப்பாக்கி முனையில் வீட்டுக்காவலில் வைத்தனர். ஜூன் 15 ம் தேதி நடக்கும் நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்கு வசதியாக அவர் தற்போது வீட்டுக்காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அரசு செய்தித் தொடர்பாளர் பேட்டிசன் ஓட்டி, மற்றும் மலத்தியான் ஈகிள்ஸ் தீவிரவாத தலைவர் அன்ட்ரூ நோரிஇதுகுறித்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தற்போது பிரதமர் பார்த்தோலேமியு போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.
போலீஸ் கண்காணிப்பின் கீழ் அவர் தன் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு வேண்டுமானாலும்சுதந்திரமாகச் செல்லலாம்.
பிரதமர் பார்த்தோலேமீயு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஜூன் 15 ம் தேதி நடக்கும்நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவர் கலந்துகொள்வதற்கு வசதியாக வீட்டுக்காவலில் இருந்து போலீஸ்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications