ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

Subscribe to Oneindia Tamil

ரூ. 1700 கோடியில் சென்னையில் கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டம்

கோவை:

சென்னையில் கழிவு நீரைச் சுத்திகரிக்க ரூ. 1700 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதிலும் 168 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் மழைநீரைத் தேக்கிவைக்க குளங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் கழிவு நீரைச் சுத்திகரிக்க ஆயிரத்து 700 கோடியில் மத்திய அரசு திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின்ஒப்புதலுக்காக வைக்கப்படும்.

காவிரி ஆற்றை, நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் காவிரி நீர் மாசுபடுவதைத் தடுக்கமுடியும். மேலும் இத்திட்டத்தின் கீழ் வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்வேன்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப் புறங்களில் மரங்களைப் பாதுகாக்க சமுதாயமரம் வளர்ப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக 168 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ளஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு குளம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் மரம் வளர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், 7லட்சத்து 77 ஆயிரத்து 777 மரங்கள் நடப்படும் என்றார்.

பின்னர் காளப்பட்டியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் சந்தானம், தமிழகமாசுக்கட்டுப்பாடு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+