அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
இந்தியாவில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறை உள்ளிட்ட பிற குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஐ.நா. சபைக்கு, மத்திய அரசு அளித்துள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரதட்சணைக் கொடுமையால் 15.2 சதவீத பெண்கள் இறக்கின்றனர்.
இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமை தவிர, ஆணாதிக்கநபர்களால் ஏற்படும் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைக் குறைப்பதற்காக அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், குறைந்தபாடில்லை.
குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது, நியாயமான விசாரணை நடத்துவது ஆகியவை இந்தியவில் அதிகம் உள்ளது.
ஜன்வாடி மஹிளா சமிதி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications