தமிழகத்தில் இன்று
கொழும்பு:
கொழும்பு நகரில் அமைச்சர் குணரத்தினே, புதன்கிழமை மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதற்குஇலங்கை தமிழ் அரசியல் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குணரத்தினே, தமிழர்களின்நலனுக்காக பாடுபட்டவர். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண கடுமையாக உழைத்தவர்.
இப்போது இலங்கை மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம் பொறுமையும், அமைதியுமே. எந்தப்பிரச்சினையையும் வன்முறை மூலம் தீர்க்க முடியாது என்பதை விடுதலைப் புலிகள் உணர வேண்டும்.
அமைச்சர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை பரவாமல்பாதுகாப்பை பலப்படுத்திய அதிபர் சந்திரிகா பாராட்டப்பட வேண்டியவர் என்று கூறப்பட்டிருந்தது.
டெலோ உறுப்பினர் சுட்டுக் கொலை:
இதற்கிடையே, கிழக்கு மட்டக்களப்பு நகரில் புதன்கிழமை மாலை தமிழ் ஈழ விடுதலை அமைப்பின்(டெலோ) உறுப்பினான நவரத்தினராஜா, விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப் பிரிவைச் சேர்ந்தவரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.