For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பிகாரில் பஸ்சுக்குத் தீ வைப்பு: 8 பயணிகள் காயம்
டெல்டோன்கான்ஜ்: (பிகார்)
பிகாரின் தென்னக மாவட்டமான பாலாமு பகுதியில் தீவிரவாதக் கும்பல் ஒன்று பஸ்சுக்குத் தீ வைத்தது. இச்சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு நடந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ஒளரங்காபாத் மற்றம் ராஞ்சியிலுள்ளமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், தீவிரவாதிகள் தெலாரி -டெல்டோனகான்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த இன்னொரு தனியார் பஸ்சை மறித்துபயணிகள் அனைவரையும் கீழே இறங்கச் சொல்லிவிட்டு பின்னர் அந்த பஸ்சுக்கும் தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றார்.
Comments
Story first published: Saturday, May 6, 2000, 5:30 [IST]