தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மெரினா கடற்கரையில் பு-தைக்-கப்-பட்-ட குழந்தை

சென்னை:

சமுத்திரத்தில் கால் நனைப்பதற்கும், கடற்கரை காற்று வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரைமணலில் கொன்று புதைக்கப்பட்ட ஒரு மாதக் கைக் குழந்தையின் பிணம் மீட்கப்பட்டது.

கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அந்தக் காட்சியை மக்கள் பரிதாபத்துடன் பார்த்தனர். சென்னை மெரினா கடற்கரையில் வியாழக்கிழமைஅதிகாலையில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது கடல் மணலில் ஓரிடத்தில் புதை குழி போல் தோற்றமளிப்பதை கண்டனர்.

அருகில் சென்று அவர்கள் பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ குழி தோண்டப்பட்டு பின் இரண்டடி கூட தோண்டியிருக்க மாட்டார்கள். அதற்குள்துணியால் சுற்றப்பட்ட ஏதோ ஒன்று இருப்பது தெரிந்தது.

உடனடியாக அதை வெளியே எடுத்து பார்த்ததும் திடுக்கிட்டனர். பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் உடல் அது. புதுச் சட்டையும், கறுப்புவளையல்களும் அணிந்திருந்த நிலையில் அக்குழந்தையின் உடல் காணப்பட்டது.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்காது என்பது அதன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்ல நிலையில்இருந்த அந்த பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்றும் போலீஸ் விசாரணை தொடர்கிறது. குழந்தையின் பெற்றோர் யார்? கடற்கரை மணலில் புதைக்கவேண்டிய காரணம் என்ன? கள்ளக் காதலில் பிறந்த குழந்தையா? அல்லது எய்ட்ஸ் நோய் தாக்கிய குழந்தையா? என்று பல்வேறு சந்தேகங்களைஏற்படுத்தியுள்ளது இந்தக் கைக்குழந்தையின் மரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+