தமிழகத்தில் இன்று
தலை தனி-யே, உடல் தனி-யே கிடந்--த ரெள-டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இரண்டுமாதங்களுக்கு முன் ஜெயிலில் இருந்து வெளியே வந்-த ரெளடி தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
புதுக்கோட்டையில் வெங்கடேசா நகர் பகுதியில் தலையில்லாத பிணம் ஒன்று கிடப்பதாகவும், அதனால் அப்பகுதியிலுள்ள மக்கள்அனைவரும் பதட்டத்துடன் காணப்படுவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் விசாரணைநடத்தினர்.
பின்னர் சிறிது நேரத்தில் திருச்சி மெயின்ரோட்டில் அரசு ஐஐடி அருகே தலை ஒன்று கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தத் தலையைக் கைப்பற்றி போலீசார் வெங்கடேசா நகரில் கிடைத்த உடலுடன் இணைத்துப் பார்த்தனர்.
அப்போது அந்த உடல் பிரபல ரெளடி வெள்ளையன் என்று தெரிய வந்தது. வெள்ளையன் கொலை, கொள்ளை உள்பட பல்வேறுவழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார்.
விடுதலையான அவர் காரைக்குடிக்குச் சென்று அங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை சினிமாவுக்குச்சென்று விட்டு அப்பகுதியில் கலாட்டா செய்துகொண்டிருந்தபோது போலீசார் அவரைப் பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்துதப்பியோடிவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளையின் தலை வேறு, உடல் வேறு என்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கொலையைச் செய்த கொலையாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீசார் இந்தக் கொலைச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications