கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய முயலவில்லை: அமெரிக்கா மறுப்பு
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா முயல்கிறது என்று பத்திரிக்கைகளில் வந்தசெய்தியை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தற்காலிகச் செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் இதுகுறித்துக் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையில் நாங்கள் அமெரிக்காவிலிருந்துதூதகர்களை அனுப்பித் தீர்வு காண முயற்சிக்கவில்லை. இந்தப் பிரச்சனையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்வோம். தொடர்ந்துஇருநாடுகளையும் இப்பிரச்சனை குறித்து விவாதிக்கும்படியும், விரைவில் சுமூகத் தீர்வு காணும்படியும் வலியுறுத்துவோம்.
எங்களை நாங்கள் இந்த விஷயத்தில் மத்தியஸ்தர்களாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை. பத்திரிக்கை ஒன்றில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணஅமெரிக்கா முயல்கிறது என்றும், அதற்காக அமெரிக்கத் தூதரக ஆட்கள் மன்சூர் இஜாஜ், மற்றும் பாருக் காத்வாரி ஆகியோரை அனுப்பியுள்ளதுஎன்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனைக்கு நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய முயலவில்லை என்றார்.
யு.என்.ஐ.