தமிழகத்தில் இன்று
6 அடி பாம்பை பிடித்த 60 வய-து பாட்-டி
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் தனது தோட்டத்தில் ஊர்ந்து சென்ற 6 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தார் -பாட்-டி.
திருப்பத்தூரில் குரிசலாப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அம்மணி. இவருக்கு வயது 60. சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்திற்குச் சென்ற போதுஅங்கே 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அம்மணி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தொலைபேசி மூலம் காட்டுஇலாகா அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள்வருவதற்குத் தாமதமானதால் இவர் சுதாகரித்துக் கொண்டு தன்னிடமிருந்த கயிறு ஒன்றின் மூலம் அந்தப் பாம்பைப் பிடித்தார். அதன் வாயைக் கயிற்றால்கட்டிவிட்டுப் பின்னர் அதை தனது கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டு அங்குள்ள தெரு வழியே நடந்து சென்றார்.
இதைப் பார்த்ததும் அங்குள்ள மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். பின்னர் அம்மணி அந்தப் பாம்பை காட்டு இலாகா அலுவலகத்திற்குச் சென்று ரேஞ்சர்கே.பி.ராமசாமியிடம் ஒப்படைத்தார்.
அம்மணியின் சாகஸத்தையும், துணிச்சலையும் காட்டுஇலாகா அதிகாரிகள் வியந்து பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications