தமிழகத்தில் இன்று
புரட்சிக்காரர்களைப் பட்டினி போட்டு பணிய வைக்க பிஜி ராணுவம் முடிவு?
வெல்லிங்டன்:
பிஜித் தீவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலரை பினைக் கைதிகளாக வைத்திருக்கும், ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அவரதுஆதரவாளர்களை பட்டினி போட்டு, பினைக்கைதிகளை மீட்க பிஜி ராணுவம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பீட் மற்றும் அவரது 100 ஆதரவாளர்கள் உள்ளனர். பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட30-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது பிடியில் உள்ளனர். மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள்செளத்ரியின் ஆட்சியை புரட்சி மூலம் கவிழ்த்தனர்.
11 நாட்களுக்கு முன்பு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளகாத்தைச் சுற்றிலும்ராணுவம் நிறுத்தப்பட்டது. புரட்சிக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.தற்போது புரட்சிக்காரர்களுக்கு உணவு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பீட் தெரிவிக்கையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு உணவு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உணவுப் பொருள்எதுவும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. எங்களுக்கு உணவு அனுப்புவதை நிறுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.நாங்களும் பிஜி இனத்தவர்கள்தான். எங்களைப் பட்டினி போடுவதால் என்ன கிடைத்து விடும் என்றார் ஆத்திரத்துடன் ஸ்பீட்.
ஸ்பீட் பிடியில் உள்ள 31 பேருக்கு அனுப்பப்பட்ட உணவை ஸ்பீட் ஆதரவாளர்களே சாப்பிட்டு விட்டதாக பிஜி பத்திரிகையொன்றில் செய்திவெளியிடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு ஸ்பீட் ஆதரவாளர்களில் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகேயுள்ள வீடுகளுக்குள் புகுந்துசூறையாடினர். இதையடுத்து அவர்களை தனது குழுவிலிருந்து விரட்டி விட்டதாக ஸ்பீட் தெரிவித்தார்.