தமிழகத்தில் இன்று
சென்-னை, ம-து-ரை ணாணி குற்-றா-லம்: சிறப்-பு -சுற்-று-லா-வுக்-கு ஏற்-பா-டு
சென்னை:
சென்னை, மதுரையில் இருந்து "குளு குளு குற்றாலத்திற்கு சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது.
இதுபற்றி சென்னையில் வியாழக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட்ட அறிக்கை:
வெளி-நாட்டு மற்றும் உள்-நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒரு -நாள் -முதல் 14 -நாட்கள் வரையிலான பல விதமான சுற்றுலாக்களை -நடத்திவருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரையில் இருந்து சிறப்பு சுற்றுலாவாக குற்றாலத்திற்கு 10.6.2000 முதல் பயணிகளை அழைத்துச் செல்கிறோம்.சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த சுற்றுலா பஸ்கள் புறப்படும். திங்கள், செவ்வாய்கிழமைகளில் தி-ரும்-ப வந்துசேரும்.
செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை போன்ற ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் அழைத்துச் செல்வோம். ஒரு நபருக்கு கட்டணம் ரூ.900. தங்கும் வசதி,உணவு இ-தில் அடங்கும்.
மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு குற்றாலம் டூர் செல்ல வசதி செய்து தரப்படும்.
அன்று இரவு 10 மணிக்கு மதுரை திரும்பும் வகையில் இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும். மதுரையில் இருந்து ஒரு நபருக்கு இரு வேளை உணவுடன் கட்டணம்ரூ.300. இவ்வாறு அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியுள்ளார்.