தமிழகத்தில் இன்று
வன்-மு-றை கண்-டிக்-கத்-தக்-க-து: வைகோ
கோவை:
இலங்கையில் நேற்று நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் தொழில்துறை அமைச்சர் குணரத்னே பலியாகியுள்ளார். இத்தகைய வன்-முறை கண்டிக்கத்தக்கதுஎன கோவையில் வைகோ கூறினார்.
கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:
இலங்கையில் மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு இலங்கை அமைச்சர் குணரத்னே பலியாகியுள்ளார். இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. தற்போது நிலவும்இந்த சூழ்நிலையில் அமைச்சர் கொல்லப்பட்டது, சர்வதேச -நாடுகளின் கவனம் இலங்கைப் பிரச்சனையின் பக்கம் திரும்பியுள்ளது. இலங்கையின் ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைக்காத வண்ணம் எந்த ஒரு தீர்வும் அமைய வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவம் தொடர்ந்து நீடிக்குமானால், போர் ஓயாது. இதன் பின் விளைவுகளையும் இலங்கை ராணுவம் சந்திக்க வேண்டியிருக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தீவிரவாதத்தையும் உயிர்ப்பலியையும் நான் ஆத-ரிப்பவன் என்ற அர்த்தமாகாது. இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications