தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
-இ-லங்-கை: க-ருணாநிதி -சும்-மா யோசனை சொன்-னார் என்-கி-றார் மாறன்

டெல்லி:

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் திமுக ஆதரவு கொடுக்கும். செக் மாடல் பிரிவினை குறித்து கருணாநிதி கூறியதுவெறும் யோசனை மட்டும்தான் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் கூறியுள்ளார்.

இலங்கையைப் பிரித்து செக்கோஸ்லோவேகியா போல இரு நாடுகளாக உருவாக்க வேண்டும் என்று தனது பிறந்த நாள் விழாவின்போது தமிழக முதல்வர்கருணாநிதி பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாநிதியின் திமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இது தர்மசங்கடத்தைக் கொடுத்தது. கருணாநிதி கருத்து அவரது சொந்தக் கருத்துஎன்று பிரதமர் வாஜ்பாய் கூறினார். இந்த நிலையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை கூட்டியிருந்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாறன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் மாறன் பேசுகையில், இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை, மத்திய அரசின் முடிவே, திமுகவின்முடிவும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுகவும் பங்கேற்றுள்ளது. எனவே மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு திமுக முழு சம்மதம் தெரிவிக்கிறது.

இலங்கையின் இறையாண்மையைக் காக்கும் விதத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எங்களது ஆதரவு உண்டு.

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை குறித்துக் கூறிய கருத்துக்கள் திரித்துக் கூறப்பட்டுவிட்டன. வேண்டும் என்றே மிகைப்படுத்தப்பட்டு விட்டது. அவரதுஅறிக்கை சில பத்திரிகைகளில் தவறாக வந்து விட்டது. தவறான அறிக்கைகளை விட அவர் ஒன்றும் ஜெயலலிதா அல்ல என்றார் மாறன்.

பேட்டியின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் உடன் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+