கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சொத்-து...பணம்: லல்லு, ராப்ரி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை
பாட்னா:
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள் கட்சித் தலைவர் லல்லு பிரசாத்யாதவ், அவரது மனைவி மற்றும் தற்போதைய முதல்வர் ராப்ரிதேவி ஆகியோர் மீது வெள்ளிக்கிழமை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் மேல் ஊழல்வழக்குகளில் தொடர்புடையது சம்பந்தமாக குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக பிகார் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் அவரது கணவர்லல்லு பிரசாத் யாதவ் மேல் தொடரப்பட்ட வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.லால் கூறுகையில் குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல்தடுப்புச் சட்டப்படி குற்றவாளி மேல் கூறப்பட்ட புகார்கள் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஏழு வருடம்கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
தற்போதைய முதல்வர் ராப்ரிதேவி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், சொத்துக்களைமறைப்பதற்காகத் தன் கணவரும் முன்னாள் பிகார் முதல்வருமான லல்லுப் பிரசாத் யாதவுக்கு உடந்தையாயிருந்ததுதொடர்பாகவும் கைது செய்யப்படுவார்.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது லல்லுப் பிரசாத் யாதவும், அவரதுமனைவி ராப்ரிதேவியும் ஆஜரானார்கள்.
லல்லுப்பிரசாத் யாதவ் மீது சிபிஐ நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவதுமுறையாகும். ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லுவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது.
வருமான வரி உயர் அதிகாரி ஷாகாய் இதுகுறித்துக் கூறுகையில் 1992 முதல் 1997 வரை ராப்ரி தேவி மற்றம் லல்லுபிரசாத் யாதவ் ஆகியோர் வருமான வரி கட்டவில்லை. அவர்களது தற்போதைய சொத்துக்களின் மதிப்புவருமானத்தை விட அதிகமாக உள்ளது. இதுகுறித்து மே 25 ம் தேதி சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்தியதில்அவர்களது நகரும் சொத்துக்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என்றார்.
யு.என்.ஐ.