தமிழகத்தில் இன்று
கொழும்பு:
-பா-தி-ய அள-வு ஆ-யு-தங்-கள் வாங்-க-ா-மல் இ-ருந்--த---தால் தான் ரா-ணு-வத்-துக்-கு பின்-ன--டை-வு-ஏற்--பட்-டுள்-ள-து என இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்ரனில் விக்கிரம சிங்கே கூறி-னார்.
அவசரநிலை பிரகடனத்தை நீடிப்பது குறித்த விவாதத்தின் மீது நாடாளுமன்றத்தில்பேசும்போது விக்கிரமசிங்கே கூ-று-கை-யில், யானைஇறவு போரில் இலங்கைப் படைகள்தோல்வி-யுற்றது சதுப்பு நிலம் போன்ற கடினமான இடத்தில் அல்ல. இலங்கைரா-ணு-வத்-தின் ஆயுதக் கிடங்கு உள்ள இடத்திலேயே தோல்வியைத் தழுவியுள்ளது.
யானைஇறவில் படைகளின் தோல்விக்குக் அதிகாரிகளின் கவனக்குறைவுதான்காரணமே தவிர அதற்கு ராணுவ வீரர்-க-ளை குறைகூறுவது தவறு.
யானைஇறவை இலங்கை அரசு தக்கவைத்துக்கொண்டிருந்தால் அதுஇலங்கைப்படையினருக்கு அது ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும்.தேவையான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் யானை இறவுபோரில் தோல்வி ஏற்பட்டிருக்காது. வன்னியை விடுதலைப் புலிகள்கைப்பற்றியதிலிருந்தே அவர்கள் யானைஇறவு மீது தாக்குதல் தொடுப்பார்கள் என்பதுமுன்பே தெரிந்துதான் என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு இலங்கை அரசே காரணம் என்று கூறிய அவர்ஆயுதம் வாங்-கு-வ-தற்-கா-ன நிதி இல்-லை என்-று கூ-றும் இலங்கை அரசு எவ்வாறுஅ-மெ-ரிக்-கா-வின் ஷெல் காஸ் கமபெனிக்கு பல லட்சக்கணக்கான ரூபாயைமானி-ய-மா-க அளித்தது என்று கேள்வி எழுப்பினார்.
யு.என்.பி. அரசு என்றுமே ராணுவத்திற்கான நிதியளவை குறைத்தது இல்லை என்றும்இராணுவத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என்றும் கேட்டார்.
உலக நாடுகள் இலங்கையின் இறையான்மையை மதிக்கின்றன. இலங்கையில்நிலவிவரும் பிரச்சனையை தீர்ப்பதற்கு இரண்டு வழிமுறைகளையும்கூறியிருக்கிறார்கள். சுமுக பேச்சு வார்த்தை முலமாவோ அல்லது ஜனநாயக தேர்தல்மூலமாகவோ தீர்த்துக் கொள்லலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் அனுராத ரத்தவத்தே விடுதலைப் புலிகளால்ஓயாத அலைகள் என்று பெயரிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் போராட்டம்கடந்த சில நாட்களாக புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.விடுதலைப் புலிகள் அரியாலி, த-னன்கிலப்பு இராணுவத் தளங்களை தாக்க்முற்பட்டனர்.
அவர்கள் சரசாலை, சாவகச்சேரி பகுதிகளிலும் புதிதாக தாக்குதல்களைதொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். இராணுவத்தினர் சாரசாலை மற்றும்சாவகச்சேயை தென்மராச்சி மேற்குப் பகுதியிலிருநது நாகர்கோயில் மேற்கு வழியாகபாதுகாத்து வருகிறார்கள் என்றும் ராணுவத்தினர் கடந்த எதிர்ப்புக்கிடையேயும் தங்கள்நிலையை திடப்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
அவசரகால நீட்டிப்பு மசோதா எந்த பிரிவினையும் இன்றி ஒப்புக்கொள்ளப்பட்டாலும்எதிர்க்கட்சித் தலைவர் இதை டி.யு.எல்.எஃப்., டெலோ மற்றும் பல இய-க்-கங்-க-ளு-டன்சேர்ந்து அதை எதிர்ப்பதாகக்க கூறினார்.












Click it and Unblock the Notifications