கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லண்டன்:
இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக லண்டனைச் சேர்ந்த ஒ-ரும-ருத்-து-வ ஆய்வு மையம் கூறியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மையம் ஒன்று இலங்கை சிறையில் நடக்கும் கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த மையத்தின் சார்பில்வெளியான அறிக்கையில், தமிழர்கள்தான் அதிக அளவு கொடுமைக்குள்ளாவதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் 184 தமிழர்கள் கைதிகளாக உள்ளனர். இவர்களுக்கு பாலியல் ரீதியாக பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன. இவர்களதுபிறப்புறுப்புகளில் மின்சார ஷாக் கொடுக்கப்படுகிறது.
தமிழ் இளைஞர்களை ஓரினச் சேர்க்கைக்கும் சில சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு பிறப்புறுப்பில் ஷாக்கொடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
1997-ம் ஆண்டு முதல் 98-ம் ஆண்டு வரை சிறைகளில் இந்தக் கொடுமைகள் நடந்து வருகின்றன. இலங்கையின் பல்வேறு சிறைகளில் இந்தக் கொடுமைநடந்து வருவதாக அந்த மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.