இந்-தி-ய ஹாக்-கி வீராங்-க-னை-க-ள் மன்-னிப்-பு கேட்-க உத்-த-ர-வு
டெல்லி:
சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக நடத்தப்படும் தகுதிப் போட்டியில் கலந்துகொள்ளாத -மூத்-தஇந்-தி-ய ஹாக்கி வீராங்கனைகள் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்திய மகளிர் ஹாக்கிஃபெடரேஷன் உத்-த-ர-விட்-டுள்-ள-து.
சந்தீப் கார், மஞ்சிந்தர் கார், சீதா கோசியான் மற்றும் ப்ரிதாம் ராணி ஆகிய மூத்த ஹாக்கி வீராங்கனைகள்ஒசாகாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.முன்னதாக இப்போட்டியில் 6 தகுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து வீராங்கனைகள், கோச், ஹாக்கி பெடரேஷனின் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் விசாரணைநடத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய மகளிர் ஹாக்கி ஃபெடரேஷன்அறிவித்துள்ளது.
இந்தக் குழு இதுகுறித்து விசாரித்த பின் ஒரு வாரத்திற்குள் ஹாக்கி விளையாட்டு மூத்த வீராங்கனைகள் இதுகுறித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஒரு வருடத்திற்கு அவர்கள் ஹாக்கிவிளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.