Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

-நி-தி நி-று-வ-ன மோசடி: பிரபாகரை விசா-ரிக்-க --பா-லீஸ் திட்-டம்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்:

கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்குத் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டிய ஆல்ரவுண்டர் மனோஜ் பிரபாகர் மீதுகூறப்-பட்-டு வ-ரும் நிதி நி-று-வ-ன மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று மத்தியப் பிரதேச போலீஸ் வட்டாரங்கள் கூறி-ன.

இது தொடர்பாக மனோஜ் பிரபாகர் மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்-கல் செய்-யப்-பட்-டுவிசாரணை நடக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் பலருக்குத் தொடர்புள்-ளதாகவும், அதற்குத் தன்னிடம் ஆதாரம்உள்ளதாகவும் குற்றச்சாட்டை சராமரியாய் கூறி வந்தவர் மனோஜ் பிரபாகர். இக்குற்றச்சாட்டை கபில்தேவ் மறுத்து வ-ரு--கி-றார்.

இதற்கிடையே மத்தியப் பிரதேச போலீ-சார் இதுகுறித்து கூ-று-கை-யில், வெகு விரைவில் பிரபாகரிடம் விசாரணை நடத்துவதற்காக உயர்போலீஸ்அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று டெல்லி செல்ல உள்--ள-து. இக் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்த மேலும் இரண்டு பேரிடமும் இக் கு-ழு விசாரணைநடத்-தும்.

தேவைப்பட்டால் துணைப் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் மற்--றொ-ரு -பா-லீஸ் குழு கைது வாரண்ட்டுடன் மனோஜ் பிரபாகரை சந்திக்கும்.

கடந்த வாரம் இந்தூரில் பிரபாகர் மீது நிதி நி-று-வ-னம் நடத்-தி -பண மோசடி செய்ததாக புகார் பதிவு செய்துள்ளோம் என்-ற-னர்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் உ.பி. போலீஸார் பிரபாகர் மீது சிட் பண்ட் பண மோசடி புகார் பதிவு செய்தனர். இந்த நிலையில் இதே போன்ற புகார் இந்தூரிலும்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட் பண்ட் நிறுவனம் மூலம் பணத்தைச் சுரண்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பிரபாகர் மற்றும் 2 பேர் மீது இந்தப் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், "அபேஸ்" என்-ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தப் புகாரை கொடுத்துள்ளனர். பிரபாகரிடம் விசாரணைநடத்தும் அளவுக்கு புகாரில் சான்றுகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிட் பண்ட் பணத்தை மோசடி செய்திருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கும் அபேஸ் நிறுவனத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரைஅபேஸ் நிறுவனத்தினர் தவறாகப் பயன்படுத்தி விட்டனர் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மறுப்புத் தெரிவித்துள்ளார்என்றனர்.

முன்னதாக 1994 ம் நடந்த மூன்று நாடுகளுக்கிடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில் கபில்தேவுக்குப் பங்குண்டு என்றுமனோஜ் பிரபாகர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குக் கபில்தேவ் மறுப்புத் தெரிவித்து வ-ரு-கி-றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+