தமிழகத்தில் இன்று
பஞ்சாபில் பூட்டிய வீட்டுக்குள் கொல்-லப்-பட்-டு கிடந்--த பாதிரியார்
ஜலந்தர்:
வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த கிறிஸ்த பாதிரியாரின் சடலத்தை கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இக்கொலைச் சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கானியாவாலி பகுதியில் நடந்தது.
இது குறித்துப் போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட பாதிரியார் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆசிஷ் பிரபாஷ் என்று அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் பஞ்சாப் முழுவதும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக டாக்குமென்டரி படங்கள் பலவற்றை மக்களிடையே போட்டுக் காண்பித்து கிறிஸ்தவமதம் குறித்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதுவே இவர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் குரூரமான முறையில் பாதிரியார் ஆசிஷ் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.அவரது உடலில் பல காயங்கள் உள்ளன. அவரது சடலம் இருந்த அறையில் கேனில் அடைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயும் இருந்தது.
குற்றவாளிகள் அவரைக் கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது பிணத்தை எரிக்க முயன்றிருக்கிறார்கள்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் வீட்டு வாசல் வராண்டாவில் வைக்கப்பட்டிருந்த சிமென்டை எடுப்பதற்காக அங்கு வந்த கட்டிடத்தொழிலாளர்கள் வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதைக் கண்டு வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது பாதி எரிந்த நிலையில் கிடந்த அவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாதிரியாரிடம் தோழமை உணர்வுடன் பேசி குற்றவாளிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம்.
பாதிரியார் ஆசிஷ் தனது 20 வயதில் யாருமில்லாத ஆதரவற்றவராக இருந்தார். இந்தியா கேம்பஸ் க்ரூசேட் பார் கிறைஸ்ட் என்ற அமைப்பில் சேர்ந்தார்என்றனர்.
இந்த அமைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஃபிலிப் கூறுகையில், ஆசிஷ் தனது பயிற்சியை முடித்து விட்டு 1998 முதல் இந்த அமைப்பின் முழுநேர பாதிரியாராகஇருந்தார். இந்த வருடம் தனது பிஏ இறுதித்தேர்வு எழுதியுள்ளார் என்றார்.
மேலும் போலீசார் அவர் வீட்டிலிருந்த சான்றிதழ்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர் வீட்டிலிருந்த டிவி முழுவதுமாய் எரிக்கப்பட்டிருந்தது.