சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் கலந்து கொள்ள பிரேசிலுக்குத் தடை வருமா?

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ரியோடிஜெனிரோ:

கால்பந்துப் போட்டிகளில் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக பிரேசில் கால்பந்துக் கழகம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரேசில் அணி சர்வதேசப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தென் அமெரிக்க கால்பந்துக் கழக பொதுச் செயலாளர் எட்வர்டோ டிவுகா கூறியுள்ளார்.

கால்பந்துப் போட்டிகளில் புள்ளிகள் வழங்கும் முறை தொடர்பாக பிரேசில் கால்பந்துக் கழகத்திற்கும், பிரேசில் நாட்டு அணியான வாஸ்கோடாகாமாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது நீதிமன்றத்தில் வாஸ்கோடா காமா வழக்குத்தொடர்ந்துள்ளது. இந்தப் புகார் குறித்து தென் அமெரிக்க கால்பந்துக் கழகமும் விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த பிரேசில் கால்பந்து சாம்பியன் போட்டித் தொடரில் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக வாஸ்கோடா காமா அணி தனது அதிருப்தியைவெளியிட்டிருந்தது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது நீதிமன்றத்தில் வாஸ்கோடா காமா அணி நிர்வாகிகள் வழக்குத் தொடர்ந்தனர்.

தற்போது இந்தப் பிரச்சினை குறித்து தென் அமெரிக்க கால்பந்துக் கழகம் விசாரித்து வருகிறது. வாஸ்கோட காமாவின் புகார் மற்றும் பிரேசில்கால்பந்துக் கழகத்தின் நடத்தை குறித்து விசாரிக்கப்படும். அதன் பிறகு புதன்கிழமை இதுகுறித்த அறிக்கை சர்வதேச கால்பந்துக் கழகத்திற்குஅனுப்பப்படும்.

பிரேசில் கால்பந்துக் கழகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததற்காக வாஸ்கோடா காமா மீது இரண்டு ஆண்டு தடை விதிக்கபரிந்துரைக்கப்படும் என்று தெரிகிறது. பிரேசில் கால்பந்துக் கழகம் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், பிரேசில் அணி சர்வதேசப் போட்டிகளில்கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

நான்கு முறை உலகக் கோப்பையை வென்றது பிரேசில் என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+