சித்துவிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரித்தனர்.
ஏற்கனவே ஒருமுறை சித்துவிடம் சி.பி.ஐ. விசாரணை நடந்துள்ளது. சித்துவிடம் என்ன கேட்கப்பட்டது, அவர் என்ன பதிலளித்தார் என்பது குறித்து தெரிவிக்கசி.பி.ஐ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
மனோஜ் பிரபாகர் சமீபத்தில் சி.பி.ஐயிடம் அளித்திருந்த சாட்சியத்தில், 1994-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, தனக்கு லஞ்சம்தர முயன்றனர். அதை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் சித்து என்று கூறியிருந்தார். அதுகுறித்து சித்துவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்திருக்கலாம் என்றுதெரிகிறது.
அந்தப் போட்டியின்போது, சித்துவும், பிரபாகரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications