தமிழகத்தில் இன்று
காஸ் ஏற்றி வந்த மும்பை சரக்கு ரயில் தடம்புரண்டது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
மும்பையில், திங்கள்கிழமை அதிகாலை கசாரா-இகாட்பூரி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில் சமையல் காஸ் (எல்பிஜி) ஏற்றி வந்த 7 பெட்டிகள்சரிந்தன. அதிர்ஷ்டவசமாக காஸ் கசிவு ஏதும் இல்லை. இதன் மூலம் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
ரயில் தடம்புரண்டதால், அப்பகுதியில் அனைத்து ரயில்களும் மாற்றி விடப்பட்டன. பவுசவால் எக்ஸ்பிரஸ், தாபோவான் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. ரத்னகிரி மற்றும் கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பூனா வழியாக மாற்றிவிடப்பட்டன.
மும்பை செல்லும் பஞ்சாப் மெயில், பவான் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் இகாத்பூரி வழியே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிவாசார்-ரத்னகிரி மார்க்கத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த இரண்டு நாட்களாக கொங்கன் ரயில் போக்குவரத்தும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications