For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜியில் 70 இந்தியர்களை காப்பாற்-றி-ய கி--ருஸ்-தவ அமைப்-பு

சுவா:

பிஜித் தலைநகர் சுவா அருகேயுள்ள நகரில் வசித்து வந்த 70 இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து பிஜி ராணுவ செய்தித் தொடர்பாளர் எரோனி வொலவோலா கூறுகையில், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் ஆதரவாளர்களால்தாக்கப்படலாம் என்ற பயத்தால், இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் முவானவேனி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்களக்கு லெளடோகா என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுஅடைக்கலம் கொடுத்துள்ளது. இவர்களை அப்புறப்படுத்தும்போது, ராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது.

ஸ்பீட்டின் ஆதரவாளர் ஒருவர் இப்பகுதியில் வசித்து வந்த இந்தியர்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் செயல்பட்டு வந்தார். இதையடுத்தே இங்கிருந்தஇந்தியர்கள் இடம் பெயர முடிவு செய்தனர் என்றார்.

மே 19-ம் தேதி பிரதமர் மகேந்திர பால் செளத்ரி தலைமையிலான ஆட்சியை ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் ஆயுதப் புரட்சி மூலம்கலைத்தனர். அன்று முதல் செளத்ரி உள்பட 31 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X