தமிழகத்தில் இன்று
த.மா.காவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு: மூப்பனார் நம்பிக்கை
காரைக்குடி:
தமிழ் மாநில காங்கிரஸிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று அக்கட்சித் தலைவர் மூப்பனார் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட த.மா.கா மாநாடு நடந்தது. அதில் மூப்பனார் பேசும்பொழுது. தேர்தல்தோல்வி பற்றி கவலைப்பட்டால் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழ்நாட்டில் தோற்றவர்கள் மீண்டும் வென்றவரலாறு உண்டு . த.மா.காவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள். நம்மை ஒதுக்கிவிட்டுயாரும் ஆட்சிக்கு வரமுடியாது.
அரசியல் கட்சிகள் த.மா.கா வோடு கூட்டணி வைத்துக் கொள்ள போட்டி போடுகின்றன. அனைவரும் நம்மைஎதிர்பார்க்கிறார்கள். இதனைக்கண்டு மற்ற கட்சிகள் பயப்படுகின்றன. எனவே நம்பிக்கையோடு செயலாற்றுங்கள்.வெற்றி நிச்சயம்.
கடந்த தேர்தலில் தவறு செய்தவர்கள் தங்கள் தவறை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவேநம்பிக்கையோடு செயல்படுங்கள் என்று பேசினார் மூப்பனார்.