தமிழகத்தில் இன்று
ஜூலை 9 ம் தேதி தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்குத் தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகாந்தும், பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமாரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 9 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை துவங்கியது. நடிகர் விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியினர்போட்டியிடுகின்றனர்.
அந்த அணியை எதிர்த்துப் போட்டியிருக்குமா என்பது தெரியவில்லை.
தலைவர், பொதுச்செயலாளர், இரண்டு துணைத்தலைவர்கள், பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள்அடங்கிய நிர்வாகக்குழுவுக்கு விஜயகாந்த் தலைமையிலான அணியினர் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.
துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகை ராதிகா, நடிகர் எஸ்எஸ்.சந்திரன், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை,செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்கள் அர்ஜூன், நெப்போலியன், வி.கே.ராமசாமி, செந்தில், மன்சூர்அலிகான், முரளி, ஆர்.சுந்தர்ராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்றால், ஏகமனதாக விஜயகாந்த் அணி வெற்றி பெறும்.












Click it and Unblock the Notifications