தமிழகத்தில் இன்று
19-ம் தேதி நீதி-மன்-ற-த்-தில் ஆஜ-ரா-க வேண்-டும் ஜெய-ல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 19-ம் தேதிஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சென்னை தனி நீதிமன்றம்செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியின்போது அரசு நிறுவனமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும்,சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காகஜெயலலிதாவும், சசிகலாவும் வாங்கினர். அப்போதைய வழிகாட்டி மதிப்பீட்டை விடமிகவும் குறைவான விலைக்கு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை வாங்கினர்.
பத்திரப் பதிவுக் கட்டணத்தையும் குறைத்து செலுத்தினர். இதனால் அரசுக்கு வருமானஇழப்பை ஏற்படுத்தினர் என்பது தான் டான்சி நில பேர ஊழல் வழக்கு. இவ்வழக்குமூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதி அன்பழகன் முன்னிலையில் இவ்வழக்கு பல கட்டங்களைத் தாண்டி, இப்போதுதீர்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
செவ்வாய்கிழமை காலையில் இவ்வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்புவக்கீல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
நாங்கள் மட்டும் டான்சி நிலத்தை வாங்கவில்லை. கார்த்தீபன் பஸ் சர்வீஸ் என்றநிறுவனம் டான்சி நிலத்தை வாங்கியது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இம்மனுவை நீதிபதி அன்பழகன் தள்ளுபடிசெய்தார். பின்னர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய ஜெயலலிதா தரப்புவக்கீலுக்கு அவர் அனுமதி அளித்தார்.
ஆனால், வக்கீல் ஆஜராகவில்லை. மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டது. 3.15மணி வரை வக்கீல் வராததால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலாஉள்ளிட்ட 6 பேரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அன்றைய தினம் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர்வக்கீல்கள் இறுதிக் கட்ட வாதம் நடைபெறும். பின்னர் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படும்.












Click it and Unblock the Notifications