தமிழகத்தில் இன்று
சி-யர்-ரா லி-யோன்: தீவி-ர-வா-தி-க-ளி-டம் சிக்--கி-யுள்-ள ராணுவ வீரர்--க-ளை மீட்-க இந்தியா தீவி-ரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சியாரோ லியோனில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள 21 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக மூன்று பேர் கொண்ட இந்தியக்குழு ஐ.நா. அதிகாரிகளுடன் பேசுவதற்காக நியூயார்க் நகருக்குச் சென்றுள்ளது.
டெல்லியில், மத்திய வெளியுறவுத் துற்ை செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், சியர்ரா லியோன் நிலைமை குறித்து நேரில் அறிவதற்காக ராணுவநடவடிக்கைகளுக்கான இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் என்.சி.விஜ், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் பி.எஸ்.லல்லி, இந்திய விமானப்படையின்ஏர் கமோடர் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா. சபை இணைச் செயலாளர் தினகர் ஸ்ரீவத்சவா ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தலைநகர்ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது.
ஜூன் 7-ம் தேதி அங்கு சென்ற இந்தியக் குழுவினர் தாரு, லுங்கி, ஹஸ்டிங்க்ஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றனர். இவை தவிர, வேறு பல இடங்களுக்கும்இந்தியக் குழு சென்று பார்த்தது.
சியர்ரா லியோனில் ஆய்வு நடத்திய பிறகு, தினகர் ஸ்ரீவத்சவா தவிர மற்ற மூவரும் நியூயார்க் சென்றுள்ளனர். அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இவர்கள்ஆலோசனை நடத்துவார்கள்.
லைபீரியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் முஸுலெங் கூப்பர் ப்ரீடவுனுக்கு வருவதால் அவரைச் சந்திக்கும் பொருட்டு தினகர் ஸ்ரீவத்சவாப்ரீடவுனிலேயே தங்கி விட்டார்.
தீவிரவாதிகள் பிடியில் உள்ள 21 இந்திய வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் கடத்தப்பட்டு ஆறு நாட்களாகி விட்டன. அவர்களுக்குஉணவுப் பொருட்கள் முறையாகப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புரட்சிகர ஐக்கிய முன்ணி தீவிரவாதிகளின் பகுதியில் பாதுகாப்பபுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 213 இந்திய அமைதி காப்புப் படைவீரர்களுடைய நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக லைபீரிய அதிபருடன், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, நைஜீரிய அதிபர் ஜெனரல் ஒலசெகுன் ஒபசஞ்சோவுடன் பிரதமர் வாஜ்பாய் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினார். விரைவில்இந்திய வீரர்களை காப்பாற்ற உதவுமாறு அப்போது கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.