தமிழகத்தில் இன்று
கொ-டுத்-த கடனை வசூலிக்-க வங்கிகளுக்கு மத்திய அரசு கெடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வாராக் கடனை வசூலிக்க நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும்மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும்கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில்பெரும்பகுதி கடன் வாராக் கடனாகக் கருதப்படுகிறது. இதனால், வங்கிகள் லாபத்தில்இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு பல்வேறு நெறிமுறைகளைவகுத்துள்ளது. இது தவிர, இந்திய வங்கியாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திஅதன் முடிவில் மேலும் சில நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ளது.
இந் நிலையில், வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலஎல்லைக்குள் வாராக் கடன்களை வசூலிக்க திட்டம் தீட்டுமாறு வங்கிகளை அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.
யார், யாருக்கு கடன் கொடுக்கப்பட்டது, எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டது,வட்டியுடன் கடனைத் திரும்பச் செலுத்தியிருக்கவேண்டிய தேதி ஆகியவற்றை முதலில்பரிசீலித்து பின்னர், கடன் வாங்கியவர்களிடம் எவ்வளவு காலத்துக்குள் கடனை ஒரேதவணையில் திருப்பிச் செலுத்தமுடியும் என்பதைக் கேட்டறியும்படி கூறப்பட்டுள்ளது.அதாவது, ஜூலை மாத இறுதிக்குள் கடன்கள் எல்லாம் வசூலித்து முடிக்கும் வகையில்இத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், அது தொடர்பாக கடன்வாங்கியவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படியும் சின்ஹாகூறியுள்ளார்.
கடனைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகளைகண்காணிக்கும்படி வங்கித் தலைவர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.ஜூலை இறுதிக்குள் தாங்கள் மேற்கொண்டுள்ள கடனைத் திரும்பப் பெறுவதற்கானநடவடிக்கைகள் குறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கும்படி வங்கிகள்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.