தமிழகத்தில் இன்று
கொ-டுத்-த கடனை வசூலிக்-க வங்கிகளுக்கு மத்திய அரசு கெடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வாராக் கடனை வசூலிக்க நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும்மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும்கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில்பெரும்பகுதி கடன் வாராக் கடனாகக் கருதப்படுகிறது. இதனால், வங்கிகள் லாபத்தில்இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு பல்வேறு நெறிமுறைகளைவகுத்துள்ளது. இது தவிர, இந்திய வங்கியாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திஅதன் முடிவில் மேலும் சில நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ளது.
இந் நிலையில், வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலஎல்லைக்குள் வாராக் கடன்களை வசூலிக்க திட்டம் தீட்டுமாறு வங்கிகளை அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.
யார், யாருக்கு கடன் கொடுக்கப்பட்டது, எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டது,வட்டியுடன் கடனைத் திரும்பச் செலுத்தியிருக்கவேண்டிய தேதி ஆகியவற்றை முதலில்பரிசீலித்து பின்னர், கடன் வாங்கியவர்களிடம் எவ்வளவு காலத்துக்குள் கடனை ஒரேதவணையில் திருப்பிச் செலுத்தமுடியும் என்பதைக் கேட்டறியும்படி கூறப்பட்டுள்ளது.அதாவது, ஜூலை மாத இறுதிக்குள் கடன்கள் எல்லாம் வசூலித்து முடிக்கும் வகையில்இத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், அது தொடர்பாக கடன்வாங்கியவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படியும் சின்ஹாகூறியுள்ளார்.
கடனைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகளைகண்காணிக்கும்படி வங்கித் தலைவர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.ஜூலை இறுதிக்குள் தாங்கள் மேற்கொண்டுள்ள கடனைத் திரும்பப் பெறுவதற்கானநடவடிக்கைகள் குறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கும்படி வங்கிகள்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications