தமிழகத்தில் இன்று
மீண்டும் தள்-ள-ா-டும் ராப்ரி அரசு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாவாடா: (பிகார்)
பிகாரில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தாவிட்டால் ராப்ரி தேவி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுவோம் என்று காங்கிரஸ்கூறியுள்ளது.
பிகாரில் ராப்ரி தேவி தலைமையில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விஷயத்தில் ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் கூட்டணிக்கட்சியான காங்கிரசும் அதிருப்தி அடைந்துள்ளது.
திங்கள்கிழமை நடந்த படுகொலைச் சம்பவத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜித் ஜோகி பிகாரில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
பிகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சந்தன் பட்சி 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில் பிகாரில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்குள் சட்டம்-ஒழுங்கு நிலையைக்கட்டுக்குள் கொண்டு வரா விட்டால் காங்கிரஸ் ராப்ரி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் ராய பிரசாத் சிங், ராமேஸ்வரூப் ராம், மதன்மோகன் ஜா, மற்றும் லட்சுமி தேவி ஆகியோர்படுகொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்றனர்.
அவர்கள் இப்படுகொலைச் சம்பவத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ 5 லட்சம் பணஉதவி செய்யுமாறு மாநில அரசைக்கேட்டுக்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications