தமிழகத்தில் இன்று
ஜூலை 3ல் நீதிமன்றத்-தில் ஆஜ-ரா-க வேண்டும் ஜெயல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் அடுத்த மாதம் 3ம் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று சென்னை இரண்டாவது தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.6.5 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல்வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. வழக்கில் 16.6.1999 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது,வழக்கில் இருந்து ஜெயலலிதா, நெடுஞ்செழியன் ஆகியோரை நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ், வழக்கில் இருந்துஜெயலலிதாவையும், நெடுஞ்செழியனையும் தனி நீதிமன்றம் விடுவித்தது சரி என்று தீர்ப்பளித்தார்.