தமிழகத்தில் இன்று
தூர் வா-ரு-கி-றார்-க-ளா? பணம் வா-ரு-கி-றார்-க-ளா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காவி-ரி டெல்டா பகுதியில் தூர் வாரும் பணி மூலம் பணம் வாரும் வேலையில் தி-முக அரசு ஈடுபட்டுள்ளது என்று அதி-முகபொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டால்தான் கடை-சி பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று சேரும்.
ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு காட்டாமணக்கு செடிகளுக்கு மருந்து அடிக்கும் வேலையை கருணாநிதிஅரசு துவக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த அரசில் நடக்கும் மாபெரும் ஊழல்களுக்கு இது ஒரு -தான் உதாரணம்.
காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடை மடைப் பகுதிகளுக்கும் தண்ணீர்சென்று சேரும் வகையில் தினம் 18 ஆயிரம் கன அடி நீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டால் தான் -முழு அளவு குறுவைசாகுபடி செய்ய -முடியும்.
மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் மட்டத்தின் உயரத்தை நிலை நிறுத்தும் வகையில் கர்--நாடக மா-நிலத்தில் இருந்து -நமக்கு சேரவேண்டிய தண்ணீரை பெறுவதற்கு உ-ரிய நடவடிக்கையை கருணாநிதி அரசு இன்னும் எடுக்கவில்லை.
பிரதமர் தலைமையில் 4 மாநில -முதல்வர்களை கொண்டு காவி-ரி -நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு இதுவரை ஒரு -முறை கூட கூடிதமிழகத்திற்கு உ-ரிய நீரை அளிப்பது குறித்து எந்தவித உறுதியும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இதே காலத்தில் மேட்டூர் அணையில் நீ-ரின் அளவு குறைந்திருப்பதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் காவிரிப் பாசனவிவசாயிகள் மீது பழியைப் போட்டு, தூர் வாரும் பணி நடைபெறுவதால் இந்த விவசாயிகளே தண்ணீரை காலதாமதமாகத் திறந்து விடச்சொன்னார்கள் என்று கருணா-நதியும், அவரது அமைச்சர்களும் கூறினார்கள்.
இதன் விளைவாக குறுவை நெல் நாற்று விட்ட விவசாயிகள் உ-ரிய காலத்தில் -நடவு செய்ய -முடியாமலும், ஏற்கனவே -நடவுசெய்திருந்தவர்கள் உ-ரிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் காய்ந்து போன -நிலையும் ஏற்பட்டது. அப்போது கூட பிரதமரையோமற்ற ஆணையத்தின் உறுப்பினர்களையோ சந்தித்துப் பேசுவதற்கு கருணா-நிதி தயாராக இல்லாததால், பல லட்சக் கணக்கான ஏக்கர்காலத்தில் பயி-ரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் காய்ந்து போனது.
அதேபோல் குறுவை அறுவடை காலத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் விவசாயிகள் விதை நெல்லை பாதுகாக்க -முடியாத -நிலைஏற்பட்டது. அரசின் தவறால் ஏற்பட்ட -நஷ்டத்திற்கும், மழையால் ஏற்பட்ட -நஷ்டத்திற்கும் அரசு -நஷ்ட ஈடு தரவில்லை. எனவேவிவசாயிகளுக்கு போதிய அளவில் மானிய விலையில் விதை -நல் வழங்கப்பட வேண்டும்.
காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு வேளாண்மைக் கிடங்குகளில் விதை நெல் இருப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.குறிப்பாக டி.கே.எம்.9 என்ற -நல் விதை தேவை அதிகமாக இருப்பதால், பற்றாக்குறை நீடிப்பதாக தெ-ரிகிறது.
டெல்டா பகுதிகளில் தூர் வாரும் பணியை கருணாநிதி அரசு இப்போது செய்து வருகிறது. இது தூர் வாரும் பணி அல்ல.ஆட்சியாளர்களின் பணம் வாரும் பணி. வடிகால்களில் தார் வாருவது பயன் அளிக்கலாம். ஆனால், பாசனக் கால்வாய்களில் தூர் வாரும்பணியால் கிளை வாய்க்கால்கள் மேடாகவே இருப்பதால் தண்ணீர் ஏறிப் பாயாமல் விவசாயிகளுக்கு பெருத்த இடையூறாக உள்ளதுஎன்பதை அரசு சிறிதும் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.