தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திருமணத்தில் ஆடம்பரம் வேண்டாமே...கருணாநிதி அறிவுரை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

திருமணங்கள் ஆடம்பரம் இல்லாமல், சுயமரியாதை முறையில் நடத்தப்பட வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி திமுகவினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நடந்த திருமண விழா ஒன்றில் கருணாநிதி பேசியதாவது:

திமுகவினருக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். திருமணங்களை சிக்கனமாகநடத்துங்கள். ஆடம்பரம் இல்லாமல் திருமண விழாக்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.சுயமரியாதை முறையைக் கடைப்பிடியுங்கள்.

ஒவ்வொரு திருமணத்திலும் பத்து பேர், இருபது பேர் உரையாற்றுவது என்பது கூடசிக்கனமானதல்ல. அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ஆயிரம் பேர், இரண்டாயிரம்பேருக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி விட்டால் அது சிக்கமனமல்ல.

நேரத்தையும் சிக்கனப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. மாப்பிள்ளையும், பெண்ணும் நெளியும் வகையில் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. விட மாட்டார்கள் போலத் தெரிகிறதே என அவர்கள் எண்ணிவிடக் கூடாது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+