தமிழகத்தில் இன்று
"குஷிவந்த் சிங்கின் "கு-ஜால்" க-த
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மிக சந்-தோ-ஷ--மாய் வாழ்ந்-து வ-ரும் மனி-தர்-க-ள் பற்-றி ஒ-ரு பட்-டி-யல் போட்-டால் அதில் குஷ்-வந்த் சிங்--குக்-கு ஒ-ரு-இ-டம் கொ-டுத்-துத் தான் ஆக வேண்-டும்.
மனி-த-ருக்-கு எப்-பே-ா-து-மே உற்-சா-கம் தான். -அ-வ-ரி-டம் தான் வய-து கூட தோல்வி கண்-டி-ருக்-கி-ற-து.
சச்சின் டெண்டுல்கர் போல நன்றாக விளையாடி பெரிய ஆளாகலாம். இல்லாவிட்டால், கண்ணதாசன், வைரமுத்துபோல பாடல்கள் எழுதி பிரபலமாகலாம். அதுவும் இல்லாவிட்டால், சிவாஜி, கமல் போல நடித்து உச்சத்தைஎட்டலாம்.
ஆனால் இதெல்லாம் சாதாரண ஆசைகள். 9 மணிக்கு ஆபிஸ் போய் விட்டு 5 மணிக்குள் வீட்டுக்கு வந்து, மாதஇறுதியில் சம்பளம் என்ற ஒன்றை வாங்கிக் கொண்டு சாதாரண திருப்திகளுடனும், அதிருப்தியான மனதுடனும்வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.
இப்படி இல்லாமல், "குண்டக்கமண்டக்க ஒருவர் புகழ் பெற வேண்டுமானால், பேசாமல் எழுத்தாளராக மாறி விடவேண்டும். அதுவும், கிளுகிளுப்பான நடையில், அழகான வர்ணனைகளுடன், பட்டவர்த்தனமாக எழுத வேண்டும்.ஆனால் இது எளிதல்ல. பல முட்கள் நிறைந்த கடினமான பாதை.
இப்படி எழுதுவதற்கு பெரிய இலக்கியப் புலியாக இருக்க வேண்டியதில்லை. நல்ல கற்பனை நயம் வேண்டும்.விலாவாரியாக விவரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவு போதும். ஆனாலும் கூட இது கடினமானஒன்றுதான்.
இப்படித்தான் ஒருவர் பெரிய புகழை எட்டியுள்ளார். குள்ளமானவர். குறும்புத்தனம் கொஞ்சம் ஜாஸ்தி.பேசினாலும், எழுதினாலும், சிரித்தாலும் அதில் ஒரு நக்கல் ஒளிந்திருக்கும். அவரது பெயர் குஷ்வந்த் சிங்.
குஷ்வந்த் சிங் சமீபத்தில் எழுதியுள்ள "கம்பெனி ஆப் தி உமன் என்ற புத்தகம் இந்த வகைப் புத்தகம்தான்.குஷ்வந்த் சிங்கிற்கு இனிமேல்தான் பெயர் கிடைக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும், இந்தப் புத்தகம் சிங்குறித்துப் பேச வைத்துள்ளது. குஷி வந்த சிங்காக மாறி இக்கதையை எழுதியுள்ளார்.
என்பது வயதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு நபரால், போர்னோகிராபி தரத்தில் ஒரு புத்தகத்தை எழுத முடியுமாஎன்ற கேள்வி எழும். அப்படி எழுதுவதாக இருந்தால், பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும்.இல்லையா?.
காரணம் கூறுகிறார் குஷ்வந்த் சிங் "மனிதனுக்கு வயதாக, ஆக, அவனது உடலுக்குள் காம உணர்வுகள் சிலிர்த்துக்கொள்ளும். வயிற்றிலிருந்து கிளம்பி தலை வரை அது ஒடும். ஆனால் இளம் வயசுல இருந்தமாதிரி, அவனால்எதுவும் செய்ய முடியாது. காரணம் நரம்புத் தளர்ச்சி, வாய்ப்பு இல்லாதது. அதனால, நினைப்பதைமனசுக்குள்ளேயே முடித்துக் கொள்கின்றனர் என்கிறார் "குஷி வந்த்சிங்.
இந்த புத்தகத்தை 83 வயதில் எழுதத் தொடங்கினார் குஷ்வந்த். 85 வயதில் முடித்தார். தனது இரண்டு வருட காலபுத்தக அனுபவம் குறித்து குஷ்வந்த் சிங் கூறுகையில், ஒரு தாத்தாவின் அனுபவங்கள் என்று இந்தப் புத்தகத்திற்குவைக்கலாம். நிறைய விஷயங்கைளத் தெரிந்து கொண்டு இந்தப் புத்தகத்தை எழுத வேண்டியதிருந்தது என்கிறார்.ரொம்பவும் குறும்புதான்.
கம்--பெனி ஆப் உமன் கதை இதுதான் (அந்தக் கால மன்மத லீலை போல):
13 வருட திருமண வாழ்க்கையில் கசப்படைந்த மோகன் குமார் மனைவியை விவாகரத்து செய்கிறார். மனைவிஎப்போதும் சண்டை போடுகிறார், எரிச்சலூட்டும் விதத்தில் நடந்து கொள்கிறார் என்று காரணம் கூறுகிறார். ஆனால்உண்மையான காரணம் வேறு. ஒரே மனைவியுடன் குடும்பம் நடத்துவது அவருக்குப் போரடித்து விட்டது. செக்ஸ்சாகசத்தில் ஈடுபட விரும்புகிறார். எனவே டைவர்ஸ்.
டைவர்ஸ் கிடைத்ததும் பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறார். படுக்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்தன்னை அணுகலாம் என்று. என்ன ஆச்சரியம். பல பெண்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதன் பிறகு தொடங்குகிறதுமோகன் குமாரின் காதல் கலாட்டாக்கள். ஹரியானாவைச் சேர்ந்த பேராசிரியை சரோஜினி பரத்வாஜ்,பாகிஸ்தானைச் சேர்ந்த யாஸ்மீன் மன்சூ, இலங்கை தூதரகத்தைச் சேர்ந்த சுசாந்திகா குணதிலகே, கோவாவைச்சேர்ந்த மோலி கோமஸ்...என பட்டியல் நீள்கிறது.
சுதந்திரமாக திரியும் மோகன் குமாரின் அனுபவங்கள், அவரது செக்ஸ் லீலைகள், காதல் குறித்த அவரதுவிளக்கங்கள் என கதை போகிறது.
இந்தப் புத்தகம் உண்மையில் காமரசம் சொட்டச் சொட்ட எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் காதல், அன்பு, வேட்கைஆகியவற்றின் வெளிப்பாடுதான் இதன் உண்மைக் கதை என்கிறார் குஷ்வந்த் சிங். ஆனால் கதையில் வரும் செக்ஸ்வர்னணைகள் படிப்பவர்களை மிரள வைக்கும்.
காமம் முடிந்த பிறகும் காதல் வரும் என்பதை நிரூபிக்க முயன்றுள்ளார் குஷ்வந்த் சிங். ஆனால் தொடர்ந்தவிளையாடல்களின் விளைவாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாகிறார் மோகன் குமார்.
கதையை ஒரு நீதிக் கருத்துடன் முடித்திருக்கிறார் குஷ்வந்த் சிங். மோகன் குமார் தேடிச் சென்ற பெண்கள் எல்லாம்தனித்து வாழ்பவர்கள். எனவே கணவர்களால் கொலை செய்யப்படும் வாய்ப்பு மோகன் குமாருக்குக்கிட்டவில்லை. மலையிலிருந்தோ அல்லது லாரியில் விழுந்தோ அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.அதையும் செய்யவில்லை. மாறாக, எய்ட்ஸ் நோய்க்குப் பலியாகிறார். தவறான வழியில் செல்பவன், அதற்குச்சரியான தண்டனை பெற வேண்டும் என்பதை இதன் மூலம் விளக்குகிறார் குஷ்வந்த் சிங்.
முதுமையில் வாழ்வும், வயதும் முடியும் என்பார்கள். ஆனால் 84 வயதில் கிளுகிளுப்பாக இருக்கிறார் குஷ்வந்த்சிங். மோகன் குமாரின் வாழ்வில் வந்து சென்ற பெண்கள் குறித்துக் கூட, குஷ்வந்த் சிங் தனி புத்தகம் எழுதினா-லும்எ-ழு-து-வார்...