For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
இன்னமு தொத்த உணவுகள் - அந்த
இந்திரன் வெஃகுறும் ஆடைகள் - பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர் - வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள் - மிக
நன்னலங் கொண்ட குடிபடை -இந்த
நானில மெங்கும் பெரும்புகழ் - மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர் - இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? (61)
தந்தை வசனஞ் செவியுற்றே- கொடி
சர்ப்பத்தைக் கொண்டதோர் கோமகன்
வெந்தழல் போலச் சினங் கொண்டே- தன்னை
மீறிப் பலசொல் விளம்பினான் - இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை - அந்த
மாமன் மதித்துரை செய்குவான் - ஐய
சிந்தை வெதுப்பத்தி னாலிவன் - சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால் (62)
தன்னுளத் துள்ள குறையெலாம் - நின்றன்
சந்நிதி யிற் சென்று சொல்லிட - முதல்
என்னைப் பணித்தனன்; யானிவன் - றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன் - பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான் - எனில்
நன்கு மொழிவ தறிந்திலன் - நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர் - சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ? (63)
(தொடரும்)
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]