தமிழகத்தில் இன்று
கோவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிறது தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவையில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைத் தடைசெய்ய மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது என கலெக்டர் சந்தானம் தெரிவித்தார்.
கோவையில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்த கருத்தரங்கு புதன்கிழமைநடந்தது.
கருத்தரங்கு நிறைவு விழாவில் கலெக்டர் சந்தானம் பேசியதாவது:
பிளாஸ்டிக் பைகளை அழிப்பதில் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் 25 மைக்ரான் அளவிற்கும் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகங்களுக்கு பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்யப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய மாநில அரசுகள் தான் இறுதிமுடிவெடுக்க வேண்டும். பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய முடியும்.
கோவை மாவட்டத்தில் மக்களின் உடல் நிலத்திற்கு கேடு விளைவிக்கும் சாணிப் பவுடர் என்ற ரசாயணப் பொருளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதேபோன்று பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய முடியுமா என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்யும் என்றார் அவர்.
அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரா மணி, டாக்டர் அஜீஸ், இன்டாக் அமைப்பின் கன்வீனர் சசி குலாத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications