தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜூன் 28-ல் தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் ஸ்டிரைக்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு சேவைத் துறை மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மூன்றாவது மற்றும்நான்காவது பிரிவு ஊழியர்கள் ஜூன் 28-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அக்டேபார் 1-ம் தேதி முதல் தொலைத் தொடர்புச் சேவையைதனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனப் பங்குகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்தும் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த அறிவிப்பை, தொலைத் தொடர்புத் துறை செயலாளர், தொலைத் தொடர்பு சேவை செயலாளர் ஆகியோருக்கு, தேசிய தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள்சங்கம், பாரதிய டெலிகாம் ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் பிற ஊழியர்கள் சங்கங்கள் கொடுத்துள்ளன.

ஊழியர்கள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தனியார்மயமாக்க முடிவை எடுத்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+