தமிழகத்தில் இன்று
சென்னை விமான நிலைய பா-து-காப்-பு தீவி-ரமாகி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:
சென்னை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பா-து--காப்-புப் பணி-யைமத்திய தொழில்--து-றை பா-து-காப்-புப் படை-யி-னர் பா-து-காப்-புப் பொறுப்பைஏற்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்லி சென்ற இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பைபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் வசம் விமான நிலையங்களின்பாதுகாப்பை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெங்களூரில் மத்தியதொழிலகப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தென் பிராந்தியத்தில், ஏற்கனவே, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில்எற்கனவே மத்திய தொழிலகப் பாதுகாப்பபு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 22-ம் தேதி முதல் விசாகப்பட்டனத்திலும், 28-ம் தேதி முதல் மங்களூர் விமானநிலையத்திலும் இப்பாதுகாப்பு தரப்படும்.
பெங்களூர் விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை முதல் மத்திய தொழிலகபாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை ஏற்றுக் கொண்டனர்.
முதல் கட்டத்தில், குவஹாத்தி, போர்ட் பிளேர், வடோதரா, ஜெய்ப்பூர் ஆகிய விமானநிலையங்களில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications