தமிழகத்தில் இன்று
ராணுவத் தாக்குதலில் மே-லும் 9புலிகள் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த கடும் மோதலில் 9விடுதலைப் புலிகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
பூனார் பகுதியில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தபுலிகளின் மறைவிடத்தில் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில், கொழும்புத்துறை மற்றும் சிவியத்தேரு ஆகிய இடங்களில்நடந்த வெவ்வேறு மோதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு மட்டக்களப்பில், திரிகோனமேடு பகுதியில், விடுதலைப் புலிகள் மீது ராணுவவீரர்கள் நடத்திய தாக்குதலில் புலி கொல்லப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில்19 வயது இளைஞர் ஒருவர் விநாயகபுரம் பகுதியில்விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்தார்.
யு.என்.ஐ.