தமிழகத்தில் இன்று
ஈழ ஆதரவுப் பேரணி நடத்த முயன்ற 2000 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போலீஸ் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஈழ ஆதரவுப் பேரணி நடத்த முயன்றது தொடர்பாக 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கைப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவைக் கண்டிக்கும் வகையிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்ஈழத் தமிழர் ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு போலீஸ் தடை விதித்தது.
தடையை மீறி, சென்னையில் ஊர்வலம் நடத்த முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 50 பேர் பெண்கள். எழும்பூரில் இருந்து இவர்கள்ஊர்வலமா செல்ல முயன்ற போது கைதாகின்றனர்.
காஞ்சிபுரம், நெல்லை, பழனி, விழுப்புரம் ஆகிய இடங்களில் தர்ணா நடத்த முயன்ற போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பேரணி நடத்த விடாமல் ஜனநாயக விரோதப் போக்கை மாநிலஅரசு கடைபிடிப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications