கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி அருகே 8 சிங்கள மீனவர்கள் கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த இலங்கை மீன் பிடிக் கப்பலை இந்திய கடலோரக்காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அதில் இருந்த 8 சிங்களமீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக்காவல் படையினர், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கப்பல் ஒன்றைகண்டனர்.

உடனே கப்பலைப் பின் தொடர்ந்து சென்றனர். கப்பலை நிறுத்தும்படி வயர்லெஸ்மூலம் எச்சரித்தனர். ஆனால், இலங்கை கப்பல் நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து இந்திய படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கைவிடுத்தனர். உடனடியாக இலங்கைக் கப்பல் வேகம் குறைந்தது. அதை இந்தியபடையினர் சுற்றி வளைத்தனர். அக் கப்பல் மீன் பிடிக் கப்பல். அதில் 8 சிங்களமீனவர்கள் இருந்தனர். அவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

கப்பலில் இருந்த 2 டன் சுறா மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 சிங்கள மீனவர்களையும் தூத்துக்குடி போலீசாரிடம் கடலோரக்காவல் படையினர் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+