தமிழகத்தில் இன்று
மிர் விண் நிலையத்தின் கடைசி வீரர்கள் பூமிக்-குத் தி-ரும்-பி-னர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அர்கல்யாக் (கஸகஸ்தான்):
ரஷியாவின் மிர் விண் நிலையத்திலிருந்து, ரஷிய விண்வெளி வீரர்கள், செர்ஜி ஸல்யோடின், அலெக்சாண்டர் கலேரி ஆகிய இருவரும் வியாழக்கிழமை பூமிக்குத்திரும்பினர்.
இனிமேல் மிர் விண் நிலையத்திற்கு யாரையும் அனுப்புவதில்லை என்று ரஷியா முடிவு செய்துள்ளதால், இவர்களே மிர் நிலையத்திற்குச் சென்று திரும்பிய கடைசிவீரர்கள் என்று கருதப்படுகிறது.
இந்திய நேரப்படி காலை 7.44 மணிக்கு கசகஸ்தானில் உள்ள அர்கல்யாக் பகுதியில் இவர்கள் வந்த விண்கல வாகனம் தரையிறங்கியது. அதிலிருந்து இருவிண்வெளி வீரர்களும் பாராசூட் மூலம் வெளியே வந்தனர்.
தரையிறங்கியவுடன் கலேரி கூறுகையில், மிகவும் நல்ல அனுபவம் எனக்குக் கிடைத்தது என்றார்.
புதிதாக யாரும் நிதியுதவி செய்தால் மட்டுமே மிர் விண் நிலையத்தை இயக்கப் போவதாக ரஷியா ஏற்கனவே அறிவித்திருந்தது. இல்லாவிட்டால் இந்தஆண்டின் பிற்பகுதியில், கடலில் மூழ்கடிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிர் விண் வெளி நிலையத்தை ஹோட்டலாகவும், சுற்றுலாலத் தலமாகவும் மாற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன.கடைசி வீரர்கள், மிர் நிலையத்திலிருந்து பூமி திரும்பவும் இந்த நிறுவனங்களே பாதியளவு நிதியுதவி செய்தன.