தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
நீபெற்ற புத்திரனே யன்றோ? - மன்னர்
நீதி யியல்பில் அறிகின்றான் - ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய - பந்தம்
தேசு குறைய எரியுமோ ? - செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் - மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம் - பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ - தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? (64)
வேள்வியில் அன்றந்தப் பாண்டவர் - நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர் - ஒரு
கேள்வி யிலாதுன் மகன்றனைப் - பலர்
கேலிசெய் தேநகைத் தார், கண்டாய்! புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே - புகழ்
ஆர்ந் திளை யோரது கொள்வதைப் - பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே - சுய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். (65)
ஆயிரம் யானை வலிகொண்டான் - உந்தன்
ஆண்டகை மைந்த னிவன் கண்டாய் - இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம் - மதி
வான்குலத் திற்கு முதல்வனாம் - ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி - தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல் - அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை - அந்த
வேள்வியில் சால உயர்த்தினார். (66)
(தொடரும்)












Click it and Unblock the Notifications