தமிழகத்தில் இன்று
சைக்கிள் குண்டு வெடித்து கமாண்டோ உள்பட 3 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் சைக்கிள் குண்டு வெடித்து சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர் உள்பட3 பேர் இறந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில் சாலையில் ஒரு சைக்கிளில் புலிகள் குண்டு வைத்திருந்தனர். அப்போது, முருகன் கோயிலில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுத்துவிட்டு கமாண்டோ படை வீரர்கள் தங்கள் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளில் வைத்த குண்டுவெடித்ததில் ஒரு கமாண்டோ வீரரும், பொது மக்களில் இருவரும் இறந்தனர். குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு வீடு சேதமுற்றது.
இதற்கிடையே, புலனருவா மாவட்டத்தில் வெல்லிகண்டா பகுதியில் உள்ள புலிகளின் மறைவிடத்தின் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 3பெண் புலிகள் உள்பட 8 புலிகள் இறந்தனர். 18 பேர் காயமடைந்தனர். முல்லைத் தீவு மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் நடத்தப்பட்டதாக்குதல்களில் இரு புலிகள் இறந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications