கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
"வெற்றியைத் தேடி ஜெயத்திடம் சென்ற மூப்பனார்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தர்மபுத்திரர் மூப்பனாரும் சூதாட்டத்துக்குச் சம்மதித்தார். வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். என்றுபத்திரிக்கையாளரும், எம்.பி.யுமான சோ கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கவிஞர் வாலிக்குப் பாராட்டு விழா நடந்தது. விழாவில் த.மா.கா.தலைவர் மூப்பனார், ஆலிலை கிருஷ்ணன் உருவம் பொறித்த நினைவுப் பரிசை கவிஞர் வாலிக்கு வழங்கினார்.விழாவில் கலந்து கொண்டு சோ பேசியதாவது:
மூப்பனார் ஒரு தர்மபுத்திரர். இந்த தர்மபுத்திரரும் சூதாட்டத்துக்கு சம்மதித்து விட்டார். கூட்டணிக்கு சம்மதித்தார்என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். அதுவும் நல்லதாகவேஅமைந்தது. இவரைப் புரிந்து கொள்ள முடியாது.
பொதுவாய் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே விழாக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மூப்பனார்வாலிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்.
பகவத் கீதையை எளிதாக புரிந்து கொள்ள பாண்டவர் பூமியை படித்தாலே போதும். தமிழ் மொழியின் கம்பீரம்வாலியின் இந்தப் படைப்பில் தெரிகிறது என்றார் சோ.