தமிழகத்தில் இன்று
தமிழ் ஈழத்தில் முஸ்லிம்களுக்கும் இடமுண்டு - விடுதலைப் புலிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைப் பிரச்சினையில் முக்கிய திருப்பமாக, தமிழ் ஈழம் என்பது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும்பொதுவானது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தமிழ் ஈழமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிகடந்த 15 ஆண்டுளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும்பொருட்டு சமீபத்தில் கடும் தாக்குதலை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை ராணுவத்தினரும் பதில்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், தமிழ் ஈழம் என்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். இலங்கையின் வட பகுதியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவைவலுப்படுத்த இரு சார்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட பகுதியையும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியையும் இணைப்பதுதொடர்பாக இலங்கை அரசும் எதிர்க்கட்சிகளும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் புலிகளின் இத்தகையஅறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ் ஈழத்துக்காக இலங்கை ராணுவத்துக்கு எதிராகப் போராட தங்கள் அமைப்பில் சேரும்படி முஸ்லிம்இளைஞர்களுக்குப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications