தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு ராணுவ மேஜர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் இறந்தார். பாதுகாப்புப்படை வேட்டையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கஇந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள்சிலர் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்குசென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனேராணுவ வீரர்களும் திருப்பி சுட்டனர். 2 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 5தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 ஏகே 56துப்பாக்கிகளும்.வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டது.
இந்த மோதலில் இந்திய ராணுவ மேஜர் ஒருவரும் பலியானார். அவர் ஜம்மு காஷ்மீர்பட்டாலியனை சேர்ந்தவர் ஆவார்.
12 தீவிரவாதிகள் சாவு:
இதுபோல பூஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் நடந்த மோதலில் 4 பாகிஸ்தான்தீவிரவாதிகளும், சம்பா என்ற இடத்தில் 3 பாகிஸ்தான் திவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டத்தில் பனிகால் என்ற இடத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் சிறப்புபோலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications