கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இந்தியர்களும் பிரதமராகலாம் என்கிறார் மலேசியப் பிரதமர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோலாலம்பூர்:
வருங்காலத்தில், மலேசியாவின் பிரதமர் பதவிக்கு மலாய் இனத்தைச் சேராத,இந்தியர்களும், சீனர்களும் வரலாம் என்று மலேசியப் பிரதமர் மஹாதிர் முகமதுகூறியுள்ளார்.
மலேசிய சீனர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், மலாய்மக்கள் மட்டும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறஇனத்தவர்களும் பிரதமர் உள்ளிட்ட பதவிக்கு வரலாம்.
1957-ம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அப்போது முதல் மலாய்இனத்தவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். எதிர்காலத்தில்சீனர்களும், இந்தியர்களும் பிரதமர் பதவிக்கு வருவார்கள். அந்தக் காலத்தை நான்எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன் என்றார்.
மலேசியாவில் உள்ளவர்களில் 50 சதவீதத்தினர் மலாய் இனத்தவர்கள். 30சதவீதத்தினர் சீனர்கள். இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதமாகும்.