தமிழகத்தில் இன்று
வானத்தப்போல, வல்லரசு..அடுத்து அண்ணன் நேரா சிம்மாசனத்துல தான் ஏறப்போறாரு... என்று விஜயகாந்த ரசிகர்கள் ஏகஉற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்தப்படம் -முழுக்க விஜயகாந்தின் எதிர்கால அரசியல் பிரவேசத்தை -மு-ழுக்க-முழுக்கவெளிப்படுத்துகின்ற படமாக இருக்குமாம்.
இந்த படத்தில் மூன்று விஜயகாந்த். அந்த மூன்று விஜயகாந்த்க்கு ஐந்து ஜோடிகள். அதாவது ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜோடிகள்.அரசியல் , காமடி, சண்டைக்காட்சிகள் என்று தூள் கிளப்புகிறாராம் விஜயகாந்த்.
வருகின்ற சட்டமன்றத்தேர்தலுக்கும், சிம்மாசனத்துக்கும் முடிச்சுபோட்டு பேசுகிறார்கள் கோலிவுட்டில்.
கோலிவுட் ஆச்சர்யம்.
நினைவில் இருக்கிறாரா.. நடிகை விஜி ! அம்பிகா , ராதா, -நதியா வ-ரிசையில் இ-ருந்-த கதா-நாயகி. தமிழ் சினிமா ரசிகர்களால்மறக்கடியாத -நடிகை. இவருக்கு காலில் ஒரு ஆபரேஷன் இரண்டு வருடங்களுக்கு -முன் -நடந்தது. -மூன்று வருடங்கள்-நடக்கடியாமல், உடம்பும் குண்டாகி ஒரமாக ஒதுங்கிப்போய் இருந்தார். இப்பொழுது குணமாகி விட்டது, உடம்பும் ச-ரியாகிவிட்டது மட்டுமல்ல.., சிம்மாசனம் என்கிற படத்தில் -நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
சிம்மாசனம் பட சூட்டிங்கிற்கு மேக்கப்போடு வந்த விஜி விஜயகாந்தைப்பார்த்து கண்கலங்கிவிட்டாராம். அந்த படத்தில் விஜிநடிப்பதற்கு ரெகமண்ட் செய்ததே விஜயகாந்த் தான், அதுமட்டுமல்ல முக்கியமான ரோலும் வாங்கிக்கொடுத்ததில் தான் விஜியின்ஆனந்தக்கண்ணீர். ஹீட்டிங் ஸ்பாட்டில் விஜியைக்கண்டவர்கள்..ஆச்சர்யத்தில் கண்வி-ரித்துப்பார்த்தார்களாம்.
இனி அவ்வளவுதான் விஜியின் கலைப்பயணம் முடிந்தது என்று எதிர்பார்த்வர்களுக்கு -முன் மறுபடியும் -மி--க அழகாக விஜிஇருப்பதைப்பார்த்துத்தான் இந்த ஆச்சர்யம்.
குருவை மிஞ்சிய சிஷ்யன்...
டைரக்டர் கே.பாலச்சந்தர் , ஒரு பக்கம் சின்னத்திரையில் பிஸி, இன்னொருபக்கம், பெப்ஸி -அ-மைப்-பின் தலைவர் அதிலும் பிஸி.கூடவே பிரச்சனைகளும் குழப்பங்களும் இருக்கின்றன. பெப்ஸிக்கு கட்டிடம் கட்ட வேண்டி ஒரு கலை நிகழ்ச்சி நடத்த இவர்எடுத்த -முயற்சி புதையல் தோண்ட பூதம் கிளம்பியதாக, அவருடன் இருந்த எல்லா டைரக்டர்களும் அவருக்கு எதிராககொடிபிடிக்க , பெ-ரிய அளவுக்கு மோதல் தொடங்கியது.
இப்பொழுது புதிதாக, இன்னொரு பிரச்சனையை உருவாக்கியுள்ளார் அவரது சிஷ்யன் டைரக்டர் வஸந்த். இவர் கவிதாலயாநிறுவனத்திற்காக, பிரசாந்த் , தேவயானி நடிக்க அப்பு என்கிற படத்தை டைரக்ட் செய்தார்.
படம் முடிந்து விட்டது. ஆனால் டைரக்டர் வஸந்திற்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை உடனே செட்டில் செய்யுமாறுகேட்டுள்ளார் வஸந்த். என்ன காரணத்தினாலோ, பணம் கொடுக்காமல் இ-ழுத்தடித்திருக்கிறது, கவிதாலயா நிறுவனம்.
கோபமடைந்த வஸந்த், தான் யார் என்று காட்டுகிறேன் என்று சவாலாகப் பேசியதோடு, தன் குருநாதர் - பணம் வராதகம்பெனிகளிடம் கையாளும் டெக்னிக்கை குருநாத-ரிடமே பயன்படுத்திவிட்டார் வஸந்த்.
படத்தில் உள்ள முக்கியமான பிலிம் ரோல்களை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார் . பிறகு சமாதானப்படுத்தி, -ப-ணத்-தைசெட்டில் செய்து ரோல்களை வாங்கிக்கொண்டார்களாம் கவிதாலயா நிறுவனத்தினர்.
தனது சிஷ்யன், தன்னிடமே கைவேலையைக்காட்டி விட்டதில் ஏக வருத்தத்தில் இருக்கிறார் , கே.பாலசந்தர்.