For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புள்-ளி விவ-ரம் பே-சுகி-றார் ஈ.வி.கே.எஸ்.இ

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் திராவிடக் கட்சிகள் தான் ஆதாயம் பெற்றதே தவிர, திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்ததால்காங்கிரஸ் எந்த அரசியல் ஆதாயம் பெறவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி-னார்.

நி-ரு-பர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில், திராவிடக் கட்சிகளில் தோளில் ஏறிக் கொண்டு காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடி வருகிறதுஎன்றும், தேர்தலுக்கு தேர்தல் அது தனது சவாரியை மாற்றிக் கொள்கிறது என்றும் சிலர் தவறாக பேசுகின்றனர்.

நாங்கள் திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு அரசியல் ஆதாயம் தேடவில்லை. திராவிடக் கட்சிகள் தான் தேர்தலுக்கு தேர்தல்எங்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அரசியல் ஆதாயம் தேடி வருகின்றன.

அதேபோல் திராவிடக் கட்சிகளை சார்ந்தே காங்கிரஸ் செயல்பட வேண்டியுள்ளதால், அக்கட்சி தமிழகத்தில் நலிவடைந்து விட்டது என்றகூற்றும் உண்மை அல்ல. 1971ல் சட்டமன்றத் தேர்தலில் தி-முக பெற்ற வெற்றிக்கு, காங்கிரஸ் கூட்டணி தான் காரணம். அதேபோல் 1991ல்அதி-முக பெற்ற வெற்றிக்கு ராஜீவ் காந்தி செய்த உயிர்த் தியாகம் தான் காரணம்.

காங்கிரசுடன் இணைய வேண்டும் என்று தமாகாவுக்கு விடுத்த வேண்டுகோள் இன்னும் இருக்கிறது. அந்த வேண்டுகோளை ஏற்பது குறித்துதமாகா தான் -முடிவு செய்ய வேண்டும். எனினும் தமிழகத்தில் தமாகாவை விட காங்கிரஸ் தான் பிரபலமான கட்சி. 1998ம் ஆண்டுகாங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட போது பெற்ற வாக்குகளை விட, 1999ல் தமாகா தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள் குறைவு.

அதிமுகவுடனான தேர்தல் உறவு தொடர்ந்து நீடிக்கும். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கும், அதில் கூறப்படும் தீர்ப்புகளும் இரு கட்சியின்உறவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X